Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...மண்டல வாரியாக 13,255 பேர் சிகிச்சை

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...மண்டல வாரியாக 13,255 பேர் சிகிச்சை

By: Monisha Tue, 25 Aug 2020 3:01:59 PM

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...மண்டல வாரியாக 13,255 பேர் சிகிச்சை

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு மாற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 85 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3 லட்சத்து 25 ஆயிரத்து 456 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 614 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,26,677 ஆக உள்ளது. 13,255 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

chennai,corona virus,infection,death,treatment ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,531
அண்ணா நகர் - 1,528
தேனாம்பேட்டை - 839
தண்டையார்பேட்டை - 741
ராயபுரம் - 856
அடையாறு - 1,230
திரு.வி.க. நகர் - 976
வளசரவாக்கம் - 1,186
அம்பத்தூர் - 1,360
திருவொற்றியூர் - 257
மாதவரம் - 575
ஆலந்தூர் - 599
பெருங்குடி - 571
சோழிங்கநல்லூர் - 535
மணலி - 144

Tags :
|