Advertisement

நாட்டில் புதியதாக 1,331 பேருக்கு கொரோனா

By: vaithegi Tue, 09 May 2023 1:23:26 PM

நாட்டில் புதியதாக 1,331 பேருக்கு கொரோனா

இந்தியா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் ... இந்தியாவில் கடந்த மாதத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்தது. இந்த வேளையில் மத்திய, மாநில அரசுகள் மீண்டும் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியது.

எனவே இதன் விளைவாக தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.

corona,india ,கொரோனா  ,இந்தியா


அந்த வகையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1,331 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது. கடந்த நாட்களை ஓப்பிடும் போது இன்றைய பாதிப்புகள் மிகவும் குறைவு. பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும் மக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

மேலும் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை தொடர்ந்து கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் சரிந்துள்ளது. தற்போது 22,742 பேர் மட்டுமே கொரோனா தொற்றிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர். இஇதையடுத்து தற்கு மத்தியில் கவலைக்குரிய செய்தியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது

Tags :
|