Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 13,446 பேர் சிகிச்சை

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 13,446 பேர் சிகிச்சை

By: Monisha Sat, 10 Oct 2020 12:32:33 PM

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 13,446 பேர் சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 13,446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,46,128-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவியவர்களில் 5 லட்சத்து 91 ஆயிரத்து 811 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 120 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,79,424 ஆக உள்ளது. அவர்களில் தற்போது 13,446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் சிகிச்சை பெற்று வந்த 1,62,605 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் 3373 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

chennai,corona virus,infection,treatment,kills ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,332
அண்ணா நகர் - 1,382
தேனாம்பேட்டை - 1,336
தண்டையார்பேட்டை - 931
ராயபுரம் - 982
அடையாறு- 1,092
திரு.வி.க. நகர்- 1,215
வளசரவாக்கம்- 826
அம்பத்தூர்- 1,000
திருவொற்றியூர்- 400
மாதவரம்- 565
ஆலந்தூர்- 706
பெருங்குடி- 585
சோழிங்கநல்லூர்- 314
மணலி - 252

Tags :