Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கொரோனாவிற்கு 13,569 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

சென்னையில் கொரோனாவிற்கு 13,569 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

By: Monisha Fri, 24 July 2020 12:53:39 PM

சென்னையில் கொரோனாவிற்கு 13,569 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 6 ஆயிரத்து 472 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மொத்தம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 793 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 3 ஆயிரத்து 232 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் ஆயிரத்தை தாண்டியே அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 90,900 ஆக உள்ளது. சென்னையில் தற்போது வரை மொத்தம் 13,569 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்

chennai,corona virus,infection,treatment,deaths ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 2,108 பேர்
அண்ணா நகர் - 1689 பேர்
திரு.வி.க.நகர் - 1213 பேர்
தேனாம்பேட்டை - 1155 பேர்
அடையாறு - 1146 பேர்
அம்பத்தூர் - 938 பேர்
ராயபுரம் - 885 பேர்
வளசரவாக்கம் - 748 பேர்
தண்டையார்பேட்டை - 700 பேர்
ஆலந்தூர் - 542 பேர்
திருவொற்றியூர் - 433 பேர்
பெருங்குடி - 407

Tags :