Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கொரோனாவுக்கு 13,756 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

சென்னையில் கொரோனாவுக்கு 13,756 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

By: Monisha Tue, 13 Oct 2020 1:15:55 PM

சென்னையில் கொரோனாவுக்கு 13,756 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

சென்னையில் கொரோனாவுக்கு 13,756 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தன கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,83,251 ஆக உள்ளது. தற்போது மருத்துவமனையில் 13,756 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 1,66,067 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 3428 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

chennai,corona virus,infection,death,treatment ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,209 பேர்
அண்ணா நகர் - 1,392
தேனாம்பேட்டை - 1,287
தண்டையார்பேட்டை - 900
ராயபுரம் - 967
அடையாறு - 1,059
திரு.வி.க. நகர் - 1,165
வளசரவாக்கம் - 842
அம்பத்தூர் - 996
திருவொற்றியூர் - 434
மாதவரம் - 497
ஆலந்தூர் - 686
பெருங்குடி - 561
சோழிங்கநல்லூர் - 304
மணலி - 240

Tags :
|