சென்னையில் கொரோனாவுக்கு 13,941 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்
By: Monisha Thu, 23 July 2020 12:54:39 PM
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து மாநிலத்தில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 583 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 89,561 ஆக உள்ளது. இதில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 13,941 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 1,955 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 2,029 பேர்
அண்ணா நகர் - 1,659 பேர்
தேனாம்பேட்டை -1,176 பேர்
தண்டையார்பேட்டை - 723 பேர்
ராயபுரம் - 933 பேர்
அடையாறு- 1,157 பேர்
திரு.வி.க. நகர்- 1,131 பேர்
வளசரவாக்கம்- 701 பேர்
அம்பத்தூர்- 926 பேர்
திருவொற்றியூர்- 450 பேர்
மாதவரம்- 354 பேர்
ஆலந்தூர்- 566 பேர்
பெருங்குடி- 403 பேர்
சோழிங்கநல்லூர்- 331 பேர்
மணலி - 206 பேர்