Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரையில் பொதுமக்கள் முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருவதால் 144 தடை உத்தரவு

மதுரையில் பொதுமக்கள் முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருவதால் 144 தடை உத்தரவு

By: vaithegi Tue, 24 Oct 2023 4:58:12 PM

மதுரையில் பொதுமக்கள் முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருவதால் 144 தடை உத்தரவு


மதுரை : மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எழுமலையில் அமைந்து உள்ள முத்தாலம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமாக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இத்திருவிழாவினை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 18 ஊர் மக்களும் கொண்டாடுவது வழக்கமான ஒன்று .

ஆனால், கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் போது இரு பிரிவினருக்கு இடையே கலவரம் ஏற்பட்டதில் திருவிழா நடத்த அனுமதி கிடையாது ஏன்னு நீதிமன்றத்தின் சார்பில் உத்தரவிடப்பட்டது.

144 ban,public,madurai ,144 தடை,பொதுமக்கள் ,மதுரை

இதனால், கடந்த 7 வருடங்களாக திருவிழா நடத்தப்படவில்லை.ஆனால், இந்தாண்டு அக்.24, 25 ஆம் தேதிகளில் திருவிழா நடத்த அனுமதி தருமாறு ஊர்மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இதனால், ஒழுங்குமுறை பிரச்சனை காரணமாக நேற்று மதியம் 2 மணியில் இருந்து வருகிற அக்.26 ஆம் தேதி இரவு 8 மணி வரையிலும் உத்தப்புரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|