Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராஞ்சி ஹவுரா பகுதியில் …..வரும் 13ம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு

ராஞ்சி ஹவுரா பகுதியில் …..வரும் 13ம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு

By: vaithegi Sat, 11 June 2022 10:19:26 AM

ராஞ்சி ஹவுரா பகுதியில் …..வரும் 13ம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு

ராஞ்சி: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் நுபுர் சர்மாவை கைது செய்த கோரி மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தர காண்ட், கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள உலுபெரியா பகுதியில் பாஜக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டது. மேலும் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்றன.

howrah. 144 prohibition order,struggle ,ஹவுரா. 144 தடை உத்தரவு, போராட்டம்

இந்நிலைமையை கட்டுப்படுத்த ஹவுரா மாவட்டத்தின் பன்ஹாரிஷ்பூர் உள்பட பதற்றம் நிறைந்த பகுதிகளில் வரும் 13ம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதள இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் மற்றும் துணை ராணுவப்படைகளை வரவழைக்க முயற்சிகளை மேற்கொண்டும் வருகின்றனர். இதுவரை மொத்தம் 136 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி பிரசாந்த் குமார் தெரிவித்தார்.

Tags :