Advertisement

மகாராஷ்டிராவில் 1,440 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Sat, 16 May 2020 11:09:37 PM

மகாராஷ்டிராவில் 1,440 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு

1440 போலீசாருக்கு கொரோனா... மகாராஷ்டிராவில் 1,440 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மஹாவில் இதுவரை மொத்தம் 27,524 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். 1,019 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் அம்மாநில காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் இதுவரை 120 அதிகாரிகள் மற்றும் ஆயிரத்து 20 போலீஸ் அதிகாரிகள் என மொத்தம் 1,140 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

cops,corona victims,10 people killed,curfew ,போலீசார், கொரோனா பாதிப்பு, 10 பேர் பலி, ஊரடங்கு

கொரோனா நோயிலிருந்து 268 போலீசார் குணமடைந்துள்ள நிலையில் 10 போலீசார் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கு காலத்தில் போலீசார் மீது 231 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக 812 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|