Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் புதிதாக 1,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மாவட்ட வாரியாக வெளியான தகவல்

தமிழகத்தில் புதிதாக 1,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மாவட்ட வாரியாக வெளியான தகவல்

By: Monisha Mon, 30 Nov 2020 08:59:54 AM

தமிழகத்தில் புதிதாக 1,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மாவட்ட வாரியாக வெளியான தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக குறைந்து வருகிறது. மாநிலத்தில் நேற்று புதிதாக 1 ஆயிரத்து 459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 80 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 52 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1 ஆயிரத்து 471 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 57 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கொரோனா தொற்று தாக்குதலுக்கு நேற்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 703 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 2
செங்கல்பட்டு - 80
சென்னை - 398
கோவை - 148
கடலூர் - 26
தர்மபுரி - 10
திண்டுக்கல் - 26
ஈரோடு - 70
கள்ளக்குறிச்சி - 7
காஞ்சிபுரம் - 58
கன்னியாகுமரி - 16
கரூர் - 15
கிருஷ்ணகிரி - 6
மதுரை - 27
நாகை - 24
நாமக்கல் - 28
நீலகிரி - 37
பெரம்பலூர் - 0
புதுக்கோட்டை - 16
ராமநாதபுரம் - 4
ராணிப்பேட்டை - 11
சேலம் - 78
சிவகங்கை - 12
தென்காசி - 14
தஞ்சாவூர் - 32
தேனி - 4
திருப்பத்தூர் - 12
திருவள்ளூர் - 88
திருவண்ணாமலை - 9
திருவாரூர் - 10
தூத்துக்குடி - 15
திருநெல்வேலி - 8
திருப்பூர் - 79
திருச்சி - 21
வேலூர் - 40
விழுப்புரம் - 19
விருதுநகர் - 9

Tags :