Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜார்க்கண்டில் 148 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது

ஜார்க்கண்டில் 148 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது

By: Nagaraj Wed, 26 Apr 2023 8:22:34 PM

ஜார்க்கண்டில் 148 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது

ஜார்க்கண்ட்: 148 மாணவர்களுக்கு கொரோனா.. .ஜார்க்கண்டில் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள உறைவிடப் பள்ளியில் 148 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து துணை ஆணையர் விஜய் ஜதவ் தெரிவித்துள்ளதாவது: கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா (கே.ஜி.பி.வி) பள்ளியில் கடந்த திங்கள் கிழமையன்று 69 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று 148 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

corona,infection,students,railway station,examination ,கொரோனா, பாதிப்பு, மாணவர்கள், ரயில்வே நிலையம், பரிசோதனை

மாவட்டத்தில் துமாரியா, போட்கா மற்றும் ஜாம்ஜெட்பூர் ஆகிய இடங்களில் உள்ள கேஜிபிவி உறைவிடப் பள்ளிகளில் இன்று மேலும் 79 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது.

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து, ரயில்வே நிலையம், பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|