Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீலகிரி, ஈரோடு, நாமக்கல் உள்பட 15 மாவட்டங்களில் இன்று (அக்.8) கனமழை பெய்ய வாய்ப்பு

நீலகிரி, ஈரோடு, நாமக்கல் உள்பட 15 மாவட்டங்களில் இன்று (அக்.8) கனமழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Sat, 08 Oct 2022 2:58:04 PM

நீலகிரி, ஈரோடு, நாமக்கல் உள்பட  15 மாவட்டங்களில்  இன்று (அக்.8) கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது :- தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுத்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனை அடுத்து நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 15 மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இன்று (அக்.8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

heavy rains,nilgiris,erode,namakkal ,கனமழை , நீலகிரி, ஈரோடு, நாமக்கல்

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என அறிவித்துள்ளது.

இதையடுத்து அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|