Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் 15 விமானங்கள் தாமதம்

டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் 15 விமானங்கள் தாமதம்

By: vaithegi Mon, 09 Jan 2023 11:01:22 AM

டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் 15 விமானங்கள் தாமதம்

புதுடெல்லி:15 விமானங்கள் தாமதம் ..... வட மாநிலங்களில் தற்போது கடுமையான குளிர் நிலவுகிறது.இதையடுத்து இந்த சீசனில் இதுவரை இல்லாத வகையில் 2.2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையே பதிவானது. அதாவது 36 டிகிரி பாரன்ஹீட் வெப்பமே காணப்பட்டது.

இதனால் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் குளிர் வாட்டி எடுக்கிறது. இதனால் காலையில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். மேலும் டெல்லியில் இந்த குளிர்கால பருவத்தின் போது பல பகுதிகளில் மிக கடுமையாக பனி சூழ்ந்து காணப்படுகிறது. காலை நேரத்தில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் எதுவும் தெரிவதில்லை.

airplanes,fog,delhi ,விமானங்கள் ,பனிமூட்டம் ,டெல்லி

இதனால் சாலைகளில் செல்லும் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே செல்கின்றன. கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர். இதனை அடுத்து டெல்லி விமான நிலையத்திலும் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் விமானங்கள் வந்து இறங்குவதில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால் விமான போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் 15 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனி மூட்டத்தால் சார்ஜா - டெல்லி விமானம் ஜெய்பூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

Tags :
|