Advertisement

கோழிக்கோடு விமான விபத்தில் 15 பேர் பலி; 123 பேர் படுகாயம்

By: Nagaraj Sat, 08 Aug 2020 00:00:33 AM

கோழிக்கோடு விமான விபத்தில் 15 பேர் பலி; 123 பேர் படுகாயம்

கோழிக்கோடு விமான விபத்தில் விமானி, குழந்தை உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விபத்து குறித்து விசாரிக்க விமானப் போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வரும் நிலையில், துபாயிலிருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது ஓடுதளப்பாதை வழுக்கியதன் காரணமாக அங்கிருந்து விலகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் விமானம் இரு துண்டாக உடைந்து, அதன் பாகங்கள் ஓடுதளப் பகுதியில் சிதறியுள்ளன. விமானத்தில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் உள்பட 191 பேர் பயணம் செய்துள்ளனர். இவ்விபத்தில் விமானி, குழந்தை உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

plane crash,170 rescued,paramedics,wounded ,விமான விபத்து, 170 பேர் மீட்பு,  பேரிடம் மீட்பு படையினர், படுகாயம்

மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், விபத்து குறித்து விசாரிக்க விமானப் போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

அப்போது சம்பவ இடத்துக்கு கோழிக்கோடு, மலப்புரம் மாவட்ட ஆட்சியர்கள், ஐஜி அசோக் யாதவ் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, பிரதமரிடம் கேரள முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதே போல 170 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் 123 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 15 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Tags :