ரஷ்யாவில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் உயிரிழப்பு
By: Nagaraj Tue, 27 Sept 2022 12:49:32 PM
ரஷ்யா: துப்பாக்கிச்சூடு... ரஷ்யாவில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 சிறுவர்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
இசேவ்ஸ்க் நகரத்தில் உள்ள பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். படுகாயம் அடைந்த 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதல் என அதிபர்
புடின் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூடு நடத்தியவனும் தற்கொலை செய்து
கொண்டான். துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்து சுமார் 20 பேர்
காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவன்
குறித்து அடையாளம் தெரியாத நிலையில், நாஜிக்கள் போல கருப்பு நிற மேலாடை,
மங்கி குல்லா போன்ற முகக்கவசம் அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்