Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐரோப்பாவில் அதிக வெப்பநிலை காரணமாக 3 மாதத்தில் 15,000 மக்கள் உயிரிழப்பு

ஐரோப்பாவில் அதிக வெப்பநிலை காரணமாக 3 மாதத்தில் 15,000 மக்கள் உயிரிழப்பு

By: vaithegi Sat, 22 Apr 2023 4:25:55 PM

ஐரோப்பாவில் அதிக வெப்பநிலை காரணமாக 3 மாதத்தில் 15,000 மக்கள் உயிரிழப்பு


இந்தியா: 3 மாதத்தில் 15,000 உயிரிப்புகள். ... உலகின் பல்வேறு பகுதிகளில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் இதுவரை இருந்த வெப்பநிலையை விட தற்பொழுது அதிகமாகவுள்ளது. அந்த வகையில், ஐரோப்பாவின் பல பகுதிகள் கடந்த 2022-ம் ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக 40-க்கும் மேற்பட்ட டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்துள்ளது.

இதற்கு முன்னதாக, உலக வானிலை அமைப்பு (WMO) புதிய வருடாந்திர காலநிலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்தாண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட அசாதாரண வெப்பம், பல நாடுகளில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையை விட அதிகமாகயிருந்தது எனவும் இந்த வெப்பநிலையால் குறைந்தது 15,000 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

people,temperature ,மக்கள் ,வெப்பநிலை

மேலும், கடந்த 2022-ம் ஆண்டில் கோடை காலத்தில், ஸ்பெயினில் சுமார் 4,600 பேர், ஜெர்மனியில் 4,500 பேர், ஐக்கிய இராச்சியத்தில் 2,800 பேர், பிரான்சில் 2,800 பேர் மற்றும் போர்ச்சுகலில் 1,000 பேர் அதிக வெப்பநிலையால் இறந்துள்ளதாகவும் உலக வானிலை அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அதுமட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள 95 மில்லியன் (9.5 கோடி) மக்கள் ஏற்கனவே காலநிலை மாற்ற காரணங்களால் இடம்பெயர்ந்துள்ளனர் என அறிக்கை கூறுகிறது. “காலநிலை அல்லது வானிலை தொடர்பான நிகழ்வுகளில் இடம்பெயர்ந்த பெரும்பாலான மக்கள் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இருந்தனர், சில சூழ்நிலைகளில் மக்கள் பாதுகாப்பு மற்றும் உதவியைத் தேடி மற்றொரு இடத்திற்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|