Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் 15,038 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை; மண்டல வாரியாக முழு தகவல்

சென்னையில் 15,038 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை; மண்டல வாரியாக முழு தகவல்

By: Monisha Fri, 17 July 2020 5:04:55 PM

சென்னையில் 15,038 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை; மண்டல வாரியாக முழு தகவல்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 416 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,236 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 82,128 ஆக உள்ளது. 15,038 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,362 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

chennai,corona virus,treatment,infection,death ,சென்னை,கொரோனா வைரஸ்,சிகிச்சை,பாதிப்பு,பலி

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 2,077
அண்ணா நகர் - 1,553
தேனாம்பேட்டை - 1,432
தண்டையார்பேட்டை - 848
ராயபுரம் - 1,141
அடையாறு - 1,017
திரு.வி.க. நகர் - 1,039
வளசரவாக்கம் - 744
அம்பத்தூர் - 927 பேர்
திருவொற்றியூர் - 616
மாதவரம் - 419
ஆலந்தூர் - 476
பெருங்குடி - 331
சோழிங்கநல்லூர் - 377
மணலியில் - 209

Tags :