Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் 15,606 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை; மண்டல வாரியாக முழு தகவல்

சென்னையில் 15,606 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை; மண்டல வாரியாக முழு தகவல்

By: Monisha Thu, 16 July 2020 1:53:43 PM

சென்னையில் 15,606 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை; மண்டல வாரியாக முழு தகவல்

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 97,310ல் இருந்து 1,02,310 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை 2,167 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 80,961 ஆக உள்ளது. 15,606 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 1,318 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி மேலும் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1,335 ஆக உயர்ந்துள்ளது.

chennai,corona virus,infection,treatment,death ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,உயிரிழப்பு

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 2,219 பேர்
அண்ணா நகர் - 1,574 பேர்
தேனாம்பேட்டை - 1,477 பேர்
தண்டையார்பேட்டை - 957 பேர்
ராயபுரம் - 1,101 பேர்
அடையாறு - 1,065 பேர்
திரு.வி.க. நகர் - 1,059 பேர்
வளசரவாக்கம்- 867 பேர்
அம்பத்தூர் - 930 பேர்
திருவொற்றியூர் - 642 பேர்
மாதவரம் - 405 பேர்
ஆலந்தூர் - 528 பேர்
பெருங்குடி - 339 பேர்
சோழிங்கநல்லூர் - 395 பேர்
மணலி - 264 பேர்

Tags :