Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் புதியதாக 1,574 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இந்தியாவில் புதியதாக 1,574 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

By: vaithegi Sat, 29 Oct 2022 11:16:00 AM

இந்தியாவில் புதியதாக  1,574 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

புதுடெல்லி: புதியதாக 1,574 பேருக்கு கொரோனா ..... சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசானது கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி மிக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

இதனை அடுத்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,574 - பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரத்து 662- ஆக அதிகரித்துள்ளது.

corona .india ,கொரோனா .இந்தியா

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,161- ஆக உள்ளது. அதேபோன்று கொரோனாவில் இருந்து இதுவரை மட்டும் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 2 ஆயிரத்து 852- ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 802- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் 9 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,29,008- ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 219.62 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

Tags :