Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈக்வடாரில் தொடர் கனமழை .. நிலச்சரிவில் 16 பேர் உயிரிழப்பு

ஈக்வடாரில் தொடர் கனமழை .. நிலச்சரிவில் 16 பேர் உயிரிழப்பு

By: vaithegi Tue, 28 Mar 2023 1:41:43 PM

ஈக்வடாரில் தொடர் கனமழை  ..   நிலச்சரிவில் 16 பேர் உயிரிழப்பு

ஈக்வடார் : ஈக்வடாரில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் உயிரிழப்பு ... ஈக்வடாரின் தெற்கு மாகாணங்களில் பல மாதங்களாக பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, ஏராளனமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து கொண்டு வருகிறது.

இதனை அடுத்து இந்த மண்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் சுமார் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை செயலகம் (SNGR) தகவல் தெரிவித்துள்ளது.

loss of life,heavy rain ,உயிரிழப்பு ,கனமழை

இந்த நிலச்சரிவு ஏற்பட்ட சிம்போராசோ மாகாணத்தில் உள்ள அலாசி கிராமத்திற்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மீட்புப்படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக ஈக்வடார் அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதயத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெய்த கனமழையால் 72 வீடுகள் இடிந்து 6,900க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. மேலும் காணாமல் போன சுமார் 50க்கும் மேற்பட்டோரை மீட்புக்குழுவினர் தேடி கொண்டு வருகின்றனர்.

Tags :