Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,159 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,159 பேருக்கு கொரோனா உறுதி

By: vaithegi Wed, 06 July 2022 10:47:33 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,159 பேருக்கு கொரோனா உறுதி


புதுடெல்லி: இந்தியாவில் நேற்று முன்தினம் 16 ஆயிரத்து 135 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை அதிரடியாக 13 ஆயிரத்து 86 ஆக குறைந்தது.

இந்த நிலையில் இன்று மட்டும் புதிதாக 16,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 159 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,35,47,809 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,270 ஆக உயர்ந்துள்ளது.

corona,casualties ,கொரோனா ,உயிரிழந்தோர்

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 15,394 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,29,07,327 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,15,212 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 1,98,20,86,763 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,95,810 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் மட்டும் 4,54,465 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 86,49,05,684 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|