Advertisement

நாட்டில் புதியதாக 163- பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி

By: vaithegi Fri, 23 Dec 2022 10:38:46 AM

நாட்டில் புதியதாக 163- பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி


இந்தியா: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் பல்வேறு வகையில் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி கொண்டு வருகிறது.

இதனை அடுத்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 163- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,380 ஆக குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக அதிகரித்துள்ளது.

corona,india,vaccine ,கொரோனா ,இந்தியா,தடுப்பூசி

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 6 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் மராட்டிய மாநிலத்தில் 2 பேரும் டெல்லியில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

கேரளா ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்த 6 பேரின் உயிரிழப்பை பதிவு செய்துள்ளது. நாட்டில் இதுவரை மட்டும் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 220.03 கோடியாக உள்ளது.

Tags :
|
|