Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 18 மாவட்டங்களில் 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு .. வானிலை மையம் தெரிவிப்பு

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு .. வானிலை மையம் தெரிவிப்பு

By: vaithegi Tue, 25 Oct 2022 7:51:13 PM

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு  ..  வானிலை மையம் தெரிவிப்பு

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- 25.10.2022, 26.10.2022: தென் தமிழக மாவட்டங்கள் (ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை), டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை), நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தள்ளது

இதையடுத்து 27.10.2022: தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

weather center,moderate rain , வானிலை மையம்,மிதமான மழை

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :