Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 18, 825 பேர் சிகிச்சை

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 18, 825 பேர் சிகிச்சை

By: Monisha Tue, 10 Nov 2020 09:18:03 AM

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 18, 825 பேர் சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் 2 ஆயிரத்து 257 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 46 ஆயிரத்து 79 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் தற்போது மருத்துவமனையில் 18 ஆயிரத்து 825 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 2 ஆயிரத்து 308 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 15 ஆயிரத்து 892 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 362 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-

அரியலூர் - 71
செங்கல்பட்டு - 919
சென்னை - 5,813
கோவை - 1,000
கடலூர் - 218
தர்மபுரி - 209
திண்டுக்கல் - 146
ஈரோடு - 794
கள்ளக்குறிச்சி - 139
காஞ்சிபுரம் - 418
கன்னியாகுமரி - 248
கரூர் - 339
கிருஷ்ணகிரி - 310
மதுரை - 411
நாகை - 336
நாமக்கல் - 444
நீலகிரி - 287
பெரம்பலூர் - 52
புதுக்கோட்டை - 195
ராமநாதபுரம் - 70
ராணிப்பேட்டை - 258
சேலம் - 1,038
சிவகங்கை - 135
தென்காசி - 69
தஞ்சாவூர் - 244
தேனி - 79
திருப்பத்தூர் - 160
திருவள்ளூர் - 1,036
திருவண்ணாமலை - 382
திருவாரூர் - 307
தூத்துக்குடி - 373
திருநெல்வேலி - 252
திருப்பூர் - 1,047
திருச்சி - 332
வேலூர் - 313
விழுப்புரம் - 301
விருதுநகர் - 78
விமானநிலைய கண்காணிப்பு - 2

Tags :