Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் நவ.18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் நவ.18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Mon, 13 Nov 2023 11:25:15 AM

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும்  நவ.18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை


தூத்துக்குடி : திருச்செந்தூர் மாவட்டத்தில் சுப்பிரமணியசாமி திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் நவ.18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ..தமிழகத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இருக்கிறது.

இதையடுத்து இந்த கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்படும். அந்நிகழ்ச்சிக்கு பல கோடிக்கணக்கான மக்கள் வருவார்கள்.

local holidays,thoothukudi,thiruchendur , உள்ளூர் விடுமுறை,தூத்துக்குடி ,திருச்செந்தூர்

இந்த நிலையில் இந்தாண்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வருகிற நவம்பர் 18 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

எனவே அதன் காரணமாக அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. அன்றைய தினம் பள்ளிகள், கல்லுரிங்கள் மற்றும் அரசு அலுவகங்கள் மூடப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :