Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தூத்துக்குடி மாவட்டத்திற்கு வம்பர் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வம்பர் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Wed, 08 Nov 2023 3:53:20 PM

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வம்பர் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி: திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை...திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா வருகிற 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து, கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18ம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில், இந்த விழாவிற்கு அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், பல்வேறு மாவட்டங்களிலிஇருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவேட் இவ்விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 18ம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

local holiday,thoothukudi ,உள்ளூர் விடுமுறை,தூத்துக்குடி

இதையடுத்து கந்த சஷ்டியை முன்னிட்டு ஐப்பசி மாத அமாவாசைகளில் பிறகு வரும் 6-ம் நாள் (சஷ்டி தினம்) அதாவது, தீபாவளி அடுத்த நாள் (13ஆம் தேதி) தொடங்குகிறது. சஷ்டி விழா தொடங்கியதும், 6 நாட்கள் பக்தர்கள் கடும் விரதமிருந்து முருகனை வழிபடுவார்கள்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் இந்த கந்த சஷ்டி திருவிழா நாட்களில் விரதம் இருந்து வந்தால், நினைத்து காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.

Tags :