Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தரப் பிரதேசத்தில் கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் பலி

By: vaithegi Tue, 12 Sept 2023 11:26:42 AM

உத்தரப் பிரதேசத்தில் கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் பலி


உத்தரப் பிரதேசம் : உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் மேற்கூரை இடிந்து விழுந்தது, நீரில் மூழ்கியது, மின்னல் தாக்கியது என்று பல்வேறு சம்பவங்களில் சிக்கி 19 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனை அடுத்து மாநிலத்தில் பல இடங்களிலும் பரவலாக தண்ணீர் தேங்கியுள்ளது. தலைநகர் லக்னோ, பாரபங்கி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பெரிதும் ஸ்தம்பித்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.

heavy rain,uttar pradesh , கனமழை,உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் சராசரியாக 40 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. மொரதாபாத், சம்பல், கனோஜ், ராம்பூர், ஹத்ராஸ், பாராபங்கி, காசிகஞ்ச், பிஜ்னோர், அமோரா, பராயிச், லக்னோ, பதான், மயின்புரி, ஹர்தோய், ஃபிரோஸாபாத், பரேலி, ஷாஜஹான்பூர், கான்பூர், சிதாபூர், ஃபரூக்காபாத், லக்கிம்பூர் கேரி, ஃபதேபூர்.

இதற்கிடையில் வருகிற 14 ஆம் தேதிவரை நாட்டில் பரவலாக பல பகுதிகளிலும் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


Tags :