பிரசாரத்திற்காக ஒரே நாளில் குவிந்த ரூ.194 கோடி நிதி
By: Nagaraj Thu, 13 Aug 2020 8:43:43 PM
இந்தியா வம்சாவளியான கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்த கடந்த 24 மணிநேரத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு ரூ. 194 கோடி நிதி திரண்டுள்ளது.
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக இந்திய மதிப்பில் 194 கோடி ரூபாய் நிதியை ஜனநாயக கட்சி திரட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சியின் துணை அதிபர்
வேட்பாளராக அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்தார். இந்த நிலையில்,
அக்கட்சியின் ஆன்லைன் நிதி திரட்டும் பிரிவான ஆக்ட் ப்ளு, ஹாரிஸ்
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் கிட்டத்தட்ட 11 மில்லியன்
டாலர்களை நன்கொடையாக பெற்றதாக அறிவித்தது.
ஒரு லட்சத்து 50
ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நன்கொடையாளர்களை பெற்றதாகவும்
குறிப்பிட்டுள்ளது. ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி
திரட்டலில் ஹாரிஸ் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக
அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.