கனடாவில் ஒரே நாளில் கொரோனாவால் 198 பேர் பாதிப்பு
By: Nagaraj Mon, 17 Aug 2020 5:12:03 PM
கடந்த ஒரே நாளில் கனடாவில் கொரோனாவால் 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரே நாளில் 198 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 2 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக கனடா உள்ளது என்பதும்
குறிப்பிடத்தக்கது. இதுவரை கொரோனாவால் ஒரு இலட்சத்து 22ஆயிரத்து 874பேர்
மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9ஆயிரத்து 26பேர் உயிரிழந்து
உள்ளனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்,
நான்காயிரத்து 577பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு
இலட்சத்து எட்டாயிரத்து 484பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுதவிர, இரண்டு ஆயிரத்து 296 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக
மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.