Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டத்திற்கு வருகிற மே 19-ம் தேதி உள்ளூர் விடுமுறை

இந்த மாவட்டத்திற்கு வருகிற மே 19-ம் தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Thu, 11 May 2023 10:28:08 AM

இந்த மாவட்டத்திற்கு வருகிற மே 19-ம் தேதி உள்ளூர் விடுமுறை

நீலகிரி : உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு மே 19 -ம் தேதி உள்ளூர் விடுமுறை ... ஊட்டியில் மலர் கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கமான ஒன்று. இதையடுத்து கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இதனால் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நிலையில், தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி போன்றவை நடத்தப்படுகிறது.

local holiday,nilgiris ,உள்ளூர் விடுமுறை,நீலகிரி

அந்த வகையில் இந்த ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சி வருகிற 19-ம் தேதி துவங்கி 23-ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இதனால் பிரமாண்ட மேடை, அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

இதனால் பிரமாண்ட மேடை, அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கும்வருகிற மே 19 -ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் அவர்கள் அறிவித்துள்ளார்.

Tags :