Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1ல் உள்ளூர் விடுமுறை

விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1ல் உள்ளூர் விடுமுறை

By: vaithegi Sun, 31 July 2022 3:04:00 PM

விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1ல் உள்ளூர் விடுமுறை

விருதுநகர் : உலகை ஆளும் அம்பிகை அவதரித்த தினமாக கொண்டாடப்படும் ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பூரண நட்சத்திரத்தில் அனைத்து அம்மன்களையும் வழிபடும் ஒரு சிறந்த விழாவாக நடைபெற்று கொண்டு வருகிறது.

இவ்வாறு சிறப்பு மிகுந்த இவ்விழா ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் ஆடிபூரா திருவிழா நடைபெறவில்லை.

local holiday,srivilliputhur,virudhunagar ,உள்ளூர் விடுமுறை, ஸ்ரீவில்லிபுத்தூர் ,விருதுநகர்

ஆனால் தற்போது ஓரளவு நோயின் தாக்கம் குறைந்துள்ளதால் மீண்டும் இவ்விழாவை தேரோட்டத்துடன் வெகு சிறப்பாக நடத்த ஆண்டாள் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட இவ்விழா கடந்த 28 ந் தேதி அன்று கருட சேவை நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

அதன் பின் ஜூலை 30 (நேற்று) ஆண்டாள் சயன சேவை நல்ல முறையில் நடந்து முடிந்தது. மேலும், ஆடிப்பூரத்தன்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி நடைபெற இருக்கிறது. இவ்வாறு ஆண்டாள் கோவிலில் மிகப்பிரமாண்டமாக நடைபெற இருக்கும் தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், இவ் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி பணி நாளாக செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

Tags :