திருச்சியில் கொரோனா பாதித்து 2 முதியவர்கள் பலி
By: Nagaraj Sun, 21 June 2020 10:04:12 PM
திருச்சியில் கொரோனா பாதித்து இரு வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த முதியவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று வரை 230 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில், ஏற்கெனவே 162 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டது. மேலும், இரு வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த
முதியவர்கள் 2 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.
கன்டோன்மென்ட்
பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர், கொரோனா தொற்றுடன் திருச்சி மகாத்மா
காந்தி நினைவு அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த
நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், திருவெறும்பூர்
பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்த 60 வயது முதியவர் கொரோனா தொற்றுடன்
திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அவரும் இன்று
இறந்துவிட்டார்.