Advertisement

கஞ்சா கடத்திய 2 பேர்... ரோந்து போலீசாரிடம் சிக்கினர்

By: Nagaraj Sat, 29 Oct 2022 10:49:38 PM

கஞ்சா கடத்திய 2 பேர்... ரோந்து போலீசாரிடம் சிக்கினர்

திருவள்ளூர்: ரோந்து பணியின் போது போலீசாரை கண்டவுடன் தப்பியயோடிய 2 பேரை வளைத்து பிடித்து விசாரித்த போது அவர்கள் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஞானக் கொல்லி தோப்பு என்ற இடத்தில் ஆர்.கே. பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் 2 நபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

2 arrested,smuggling ganja, ,இருவர், கஞ்ச, கடத்திய, கைது

அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் பையை சோதனை செய்ததில் 1¼ கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.


இதையடுத்து விசாரணையில் அவர்கள், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே அயலம்பேடு கிராமத்தை சேர்ந்த சூர்யா (வயது 23), ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் அய்யனேரி கிராமத்தை சேர்ந்த குமரேசன் (26) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags :