Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காரைக்காலில் காலரா நோய் .. சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழப்பு

காரைக்காலில் காலரா நோய் .. சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழப்பு

By: vaithegi Sun, 03 July 2022 3:48:38 PM

காரைக்காலில் காலரா நோய் .. சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழப்பு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர்கள் சிகிச்சை பெற்று திரும்பி வருகின்றனர். இதில் சில நோயாளிகளுக்கு மட்டும் காலரா தொற்று உறுதியாகியுள்ளது.

death,cholera ,உயிரிழப்பு ,காலரா நோய்

காரைக்காலில் காலரா தொற்று எதிரொலியாக அங்கு மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இணை நேய்களால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், வாந்தி, வயிற்றுப்போக்கால் காரைக்காலில் இதுவரை 1,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காலரா நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags :
|