Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுபாட்டில்கள் கடத்தில்... பிரான்சில் இலங்கை தமிழர்கள் 2 பேர் அரெஸ்ட்

மதுபாட்டில்கள் கடத்தில்... பிரான்சில் இலங்கை தமிழர்கள் 2 பேர் அரெஸ்ட்

By: Nagaraj Fri, 18 Nov 2022 12:28:09 PM

மதுபாட்டில்கள் கடத்தில்... பிரான்சில் இலங்கை தமிழர்கள் 2 பேர் அரெஸ்ட்

பிரான்ஸ்: 3 ஆயிரம் மதுபாட்டில்கள் கடத்திய பிரான்ஸின் வடபகுதியிலிருந்து இல் து பிரான்ஸிற்கு சென்று கொண்டிருந்த 2 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேர்தன் (Verdun) சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கடந்த 8ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

லக்சம்பேர்க்கில் வாங்கிய 3,000 மது பாட்டில்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் மேற்கொண்ட பாரிய சுற்றிவளைப்பாக உள்ளதென அதிகாரிகள் கூறியுள்ளனர். கார் ஒன்றில் மறைத்து வைத்த நிலையில் இந்த மதுபானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

காரில் காணப்பட்ட அதிக நிறையும் அதிக புகையை வெளியேற்றிய நிலையில் பயணித்தமையினால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, அந்த போலீஸார் சுற்றிவளைத்து சோதனையிட்ட போது சரியாக 2,976 மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

illegality,liquor,trafficking,2 sri lankans,arrested,france ,சட்ட விரோதம், மதுபானம், கடத்தல், 2 இலங்கையர்கள், கைது, பிரான்ஸ்


இல் து பிரான்ஸ் பிராந்தியத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் கடைகளில் அதிக விலையில் விற்பனை செய்வதற்காக இந்த மதுபான பாட்டில்களை கொண்டு வந்துள்ளனர்.

எனினும் போலீஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் லக்சம்பேர்க்கில் இருந்து இந்த மதுபான பாட்டில்கள் கடத்தி வரப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இரண்டு இலங்கையர்களும் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ் குழுவொன்றினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தத்திற்கு மத்தியில் இவர்கள் இந்த மதுபானங்களை சட்டவிரோதமாக கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இந்த இலங்கையர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Tags :
|