டில்லியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த 2 தீவிரவாதிகள் கைது
By: Nagaraj Sun, 15 Jan 2023 1:21:56 PM
புதுடில்லி: டெல்லியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி போலீசார் இரண்டு தீவிரவாதிகளை நேற்று கைது செய்தனர். நௌஷாத் மற்றும் ஜக்ஜீத் சிங் ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தங்கியிருந்த சாரதா காலனியின் வாடகை வீட்டின் அருகே உள்ள கழிவுநீர்க் கால்வாயில் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இதில் தீவிரவாதிகளுக்குத் தொடர்பு இருக்குமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த தீபாவளிக்கு இருவரும் இப்பகுதியில் குடிவந்து பல்வேறு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.