தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
By: Monisha Wed, 11 Nov 2020 10:20:58 AM
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 2 ஆயிரத்து 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 48 ஆயிரத்து 225 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 18 ஆயிரத்து 709 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 237 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 18 ஆயிரத்து 129 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு நேற்று 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 387 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 10
செங்கல்பட்டு - 104
சென்னை - 577
கோவை - 196
கடலூர் - 32
தர்மபுரி - 13
திண்டுக்கல் - 21
ஈரோடு - 77
கள்ளக்குறிச்சி - 15
காஞ்சிபுரம் - 91
கன்னியாகுமரி - 30
கரூர் - 29
கிருஷ்ணகிரி - 33
மதுரை - 43
நாகை - 43
நாமக்கல் - 56
நீலகிரி - 29
பெரம்பலூர் - 5
புதுக்கோட்டை - 23
ராமநாதபுரம் - 3
ராணிப்பேட்டை - 20
சேலம் - 97
சிவகங்கை - 17
தென்காசி - 8
தஞ்சாவூர் - 67
தேனி - 16
திருப்பத்தூர் - 25
திருவள்ளூர் - 107
திருவண்ணாமலை - 47
திருவாரூர் - 31
தூத்துக்குடி - 24
திருநெல்வேலி - 21
திருப்பூர் - 98
திருச்சி - 39
வேலூர் - 45
விழுப்புரம் - 35
விருதுநகர் - 19