தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
By: Monisha Sat, 07 Nov 2020 8:08:22 PM
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் படிப்படியாக குறைந்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்றய கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 352 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 198 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.