Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Sat, 07 Nov 2020 8:08:22 PM

தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் படிப்படியாக குறைந்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்றய கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

கொரோனா தொற்று பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 352 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 198 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.

Tags :