Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 2 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 2 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Mon, 22 June 2020 10:39:18 AM

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 2 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உள்மாநிலத்தில் மட்டும் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 2 ஆயிரத்து 480 பேர். விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 5 நபர், உள்நாட்டில் இருந்து வந்தவர்கள் 3 பேர் ஆவர்.

மேலும், ரெயில் மற்றும் சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்களில் 44 பேர் ஆகும். இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,coronavirus,influence,chennai,cuddalore ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சென்னை,கடலூர்

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 25 ஆயிரத்து 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 32 ஆயிரத்து 754 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 757 பேர் உயிரிழந்துள்ளனர்.

உள்மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 6
செங்கல்பட்டு - 121
சென்னை - 1,493
கோவை - 12
கடலூர் - 90
தர்மபுரி - 5
திண்டுக்கல் - 26
ஈரோடு - 7
கள்ளக்குறிச்சி - 18
காஞ்சிபுரம் - 64
கன்னியாகுமரி - 6
கரூர் - 5
மதுரை - 68
நாகை - 24
நாமக்கல் - 2
புதுக்கோட்டை - 1

tamil nadu,coronavirus,influence,chennai,cuddalore ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சென்னை,கடலூர்

ராமநாதபுரம் - 30
ராணிப்பேட்டை - 2
சேலம் - 10
சிவகங்கை - 7
தென்காசி - 22
தஞ்சாவூர் - 44
தேனி - 7
திருவள்ளூர் - 120
திருவண்ணாமலை - 76
திருவாரூர் - 26
தூத்துக்குடி - 2
திருநெல்வேலி - 25
திருப்பூர் - 4
திருச்சி - 35
வேலூர் - 87
விழுப்புரம் - 22
விருதுநகர் - 13

Tags :