Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று 2 ஆயிரத்து 743 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்பு

தமிழகத்தில் இன்று 2 ஆயிரத்து 743 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்பு

By: vaithegi Wed, 06 July 2022 9:12:02 PM

தமிழகத்தில் இன்று 2 ஆயிரத்து 743 பேர் கொரோனாவால்  புதிதாக பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து கொண்டு வருகிறது.

அந்தவகையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,662 இல் இருந்து 2,743 ஆக உயர்ந்துள்ளது.

damage,corona ,பாதிப்பு , கொரோனா

மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,765 லிருந்து 17,717 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,791 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

சென்னையில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு 1,060 இல் இருந்து 1,062 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மட்டும் 38 ஆயிரத்து 27 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இன்று புதிதாக உயிரிழப்பு பதிவாகவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|