Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரியில் 2 பெண்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

புதுச்சேரியில் 2 பெண்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

By: vaithegi Thu, 14 Sept 2023 12:38:46 PM

புதுச்சேரியில் 2 பெண்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

புதுச்சேரி: சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமல் கூறியதாவது: புதுச்சேரி தருமாபுரியைச் சேர்ந்த மீனரோஷனி(28) என்ற பெண் டெங்குவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 4-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து 8-ம் தேதி மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தொடர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

மேலும், புதுச்சேரி குருமாம்பேட்டைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி காயத்ரி என்பவர் கடந்த 10-ம் தேதி காய்ச்சலுக்காக தனியார் மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்று, மேல்சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

death,dengue,puducherry ,உயிரிழப்பு ,டெங்கு ,புதுச்சேரி

அதனை அடுத்து அங்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்” என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை புதுச்சேரி மாநில அரசு தீவிரப்படுத்த வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினர்.

Tags :
|
|