Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போலி சான்றிதழ் கொடுத்து ராணுவ பயிற்சி சேர முயன்ற 2 இளைஞர்கள் சிக்கினர்

போலி சான்றிதழ் கொடுத்து ராணுவ பயிற்சி சேர முயன்ற 2 இளைஞர்கள் சிக்கினர்

By: Nagaraj Mon, 16 Oct 2023 11:40:41 AM

போலி சான்றிதழ் கொடுத்து ராணுவ பயிற்சி சேர முயன்ற 2 இளைஞர்கள் சிக்கினர்

சிவகங்கை: போலி சான்றிதழ் ரெடி பண்ணி ராணுவ பயிற்சியில் சேர உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழகம் வந்த வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர் சிக்கினர்.
சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலை அருகே இலுப்புக்குடியில் உள்ள இந்திய - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் சேர ஒரே பெயர் கொண்ட போலி சான்றிதழ்களுடன் வந்த இரு இளைஞர்கள் பிடிபட்டனர்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அஜய் சிங் என்பவர் கடந்த மாதம் பயிற்சியில் சேர்ந்த நிலையில், கடந்த வாரம் அதே மாநிலத்தில் இருந்து சந்தீப் யாதவ் என்பவரும் பயிற்சியில் சேர வந்துள்ளார்.
இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், தேர்வில் வெற்றிபெற்று பயிற்சிக்குத் தேர்வான உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அஜய் குமார் யாதவின் வரிசை எண்ணுடன் கூடிய போலி சான்றிதழை இருவரும் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, பூவந்தி காவல் நிலையத்தில் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதா, பின்னணியில் இருப்பவர்கள் யார், பயிற்சியில் சேர வந்தவர்கள் தீவிரவாதிகளா என பல்வேறு கோணங்களில் தனிப்படை அமைத்து விசாரித்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்தார்.
உத்தரபிரதேசம், ராணுவம், போலி சான்றிதழ், சிக்கினர், 2 பேர்


Tags :