Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சரக்கு கப்பலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் காயம்

சரக்கு கப்பலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் காயம்

By: Nagaraj Sat, 05 Aug 2023 7:26:28 PM

சரக்கு கப்பலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் காயம்

ஜெர்மனி: பிரீமென்ட்டில் ஹைவே சரக்கு கப்பலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.

ஜெர்மனியில் இருந்து ‘பிரீமென்ட்டில் ஹைவே’ என்ற சரக்கு கப்பல் 3,800-க்கும் அதிகமான கார்களுடன் இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பல் முழுக்க முழுக்க இந்திய மாலுமிகளால் இயக்கப்பட்டது.

கப்பலில் 21 இந்திய மாலுமிகள் இருந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி நெதர்லாந்தின் அமிலன்ட் தீவு அருகே சென்று கொண்டிருந்த போது ‘பிரீமண்டில் ஹைவே’ என்ற சரக்கு கப்பல் திடீரென தீப்பிடித்தது.

20 people,20 பேர்,cargo,fire in prement,highway,injury,ship, ,கப்பல், காயம், சரக்கு, தீ விபத்து, பிரீமென்ட்டில் ஹைவே

மாலுமி ஒருவர் உயிரிழந்தார். 20 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை நெதர்லாந்து கடலோர காவல்படையினர் மீட்டனர்.

தீ விபத்து ஏற்பட்ட சரக்கு கப்பலில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட 20 இந்தியர்கள் பத்திரமாக வீடு திரும்பியுள்ளதாக நெதர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அதேபோல், தீ விபத்தில் உயிரிழந்த இந்திய மாலுமியின் உடல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

Tags :
|
|
|