Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Fri, 13 Nov 2020 09:10:23 AM

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 16,504 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 93 ஆயிரத்திற்கு 784 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16 ஆயிரத்து 484 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்து 297 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,935 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. வீடுகளில் 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

virudhunagar district,corona virus,infection,treatment,deaths ,விருதுநகர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 16,504 ஆக உயர்ந்துள்ளது.

வழக்கம்போல் மாவட்ட சுகாதார துறையினர் பாதிப்பு அடைந்தவர்களின் பட்டியலை முழுமையாக வெளியிடாத நிலை தொடர்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ பரிசோதனைகளை குறைக்க கூடாது என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

Tags :