Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 205 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 205 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

By: vaithegi Sun, 23 Oct 2022 9:38:35 PM

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 205 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

சென்னை: நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 205 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ...... தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள்தான். அதிலும் முக்கியமாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் பல நூறு கோடிகள் வருமானம் காரணமாக அரசுக்கு பெரும் நிதி வருவாயை அள்ளி கொடுத்துகொண்டு வருகிறது.

இதனை அடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் கடந்த வருடம் 11 சதவீதம் உயர்ந்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. கடந்தாண்டு நவம்பர் 3 மற்றும் 4ம் தேதி 2 நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையானது.

tasmac,chennai ,டாஸ்மாக் ,சென்னை

ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகையை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக சனிக்கிழமை விடுமுறை நாளன்று சுமார் 150 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெறும்.

இதையடுத்து இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 205 கோடி ரூபாய்க்கு மேல் டாஸ்மாக் கடைகளில் மது அதிகமாக விற்பனையாகி உள்ளது. மேலும் இன்று மட்டும் 230 முதல் 240 கோடி ரூபாய் வரை மது விற்பனையும், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நாளை சுமார் 250 கோடிக்கு மேல் மது பாட்டில் விற்பனை நடைபெறும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது.

Tags :
|