Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வழக்குகளை நேரடியாக விசாரிக்க மேலும் 21 நீதிபதிகள் முடிவு; சென்னை ஐகோர்ட் அறிவிப்பு

வழக்குகளை நேரடியாக விசாரிக்க மேலும் 21 நீதிபதிகள் முடிவு; சென்னை ஐகோர்ட் அறிவிப்பு

By: Monisha Thu, 01 Oct 2020 10:37:39 AM

வழக்குகளை நேரடியாக விசாரிக்க மேலும் 21 நீதிபதிகள் முடிவு; சென்னை ஐகோர்ட் அறிவிப்பு

சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழக்குகளை காணொலி காட்சி வாயிலாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணை முறைக்கு வக்கீல் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் 6 மூத்த நீதிபதிகள் தலைமையிலான 6 அமர்வுகள் மட்டும், வழக்குகளை நேரடியாக விசாரிக்கும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாக குழு உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் மேலும் 21 நீதிபதிகள் வழக்குகளை நேரடியாக விசாரிக்க உள்ளனர். இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு நீதித்துறை பதிவாளர் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, பி.என்.பிரகாஷ், புஷ்பா சத்தியநாராயணா, வி.பாரதிதாசன், டி.கிருஷ்ணகுமார், வி.பார்த்திபன், எம்.எஸ்.ரமேஷ், டி.ரவீந்திரன், பி.வேல்முருகன், ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன், ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார், வி.பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, எம்.தண்டபாணி, பி.ராஜமாணிக்கம், ஆர்.பொங்கியப்பன், ஆர்.ஹேமலதா, சி.சரவணன், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் வருகிற 5-ந்தேதி முதல் வழக்குகளை நேரடியாக விசாரிக்க உள்ளனர்.

chennai high court,judges,cases,judiciary,investigation ,சென்னை ஐகோர்ட்,நீதிபதிகள்,வழக்குகள்,நீதித்துறை,விசாரணை

எனவே, நேரடியாக வழக்குகளை விசாரிக்கும் முறையில் விருப்பம் உள்ள வக்கீல்கள், புதிய வழக்குகளை தாக்கல் செய்யும்போது, அதை குறிப்பிட்டு தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளை நேரடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றாலும், ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு கடிதம் கொடுக்க வேண்டும்.

ஐகோர்ட்டு வளாகத்திலும், கோர்ட்டு அறைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், காலையில் 'ரிட்' மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகளையும், பிற்பகலில் மேல் முறையீட்டு வழக்குகளும், உரிமையியல் வழக்குகளும் நீதிபதிகள் விசாரணைக்கு எடுப்பார்கள்.

நேரடி விசாரணையா? காணொலி காட்சி விசாரணையா? என்பதை வக்கீல்கள் முடிவு செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்புக்காக ஐகோர்ட்டு ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிவிப்புகளை அனைவரும் தீவிரமாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|