Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Thu, 16 July 2020 6:32:21 PM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 315 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 97,310ல் இருந்து 1,02,310 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை 2,167 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 80,961 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

krishnagiri district,corona virus,infection,treatment ,கிருஷ்ணகிரி மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 315 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 336 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட 21 பேரும் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலர் கொரோனவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா நோய் பரவல் தீவிரம் அடைந்து வருவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :