Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசியல் பழிவாங்கலுக்கு 220 லட்சம் மக்கள் உள்ளாகியுள்ளனர்... சஜித் காட்டம்

அரசியல் பழிவாங்கலுக்கு 220 லட்சம் மக்கள் உள்ளாகியுள்ளனர்... சஜித் காட்டம்

By: Nagaraj Thu, 18 Aug 2022 10:02:20 AM

அரசியல் பழிவாங்கலுக்கு 220 லட்சம் மக்கள் உள்ளாகியுள்ளனர்... சஜித் காட்டம்

கொழும்பு: எதிர்கட்சி தலைவர் குற்றச்சாட்டு... அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளது இந்நாட்டின் இருநூற்று இருபது இலட்சம் மக்களே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் இருந்து காப்பாற்றுவதையே அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், "அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான அரச அதிகாரிகள் குழுவொன்றிற்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்று பிரதமர் அலுவலகத்தின் ஊடாக முன்வைக்கும் நடவடிக்கையில் மொட்டுக் கட்சி துரிதமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

revenge,privileges,politics,formal education,arbitrary decision ,பழிவாங்கல், சலுகைகள், அரசியல், முறையான கல்வி, தன்னிச்சை முடிவு

இத்தருணத்தில் அவ்வாறானதோர் செயலை மேற்கொள்ள ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். தன்னிச்சையான முடிவினால் உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்துள்ளதோடு, இன்றும் அவர்களுக்கான நட்டஈடு வழங்கப்படவில்லை.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்நாட்டின் பிள்ளைகள் முறையான கல்வியை பெறவில்லை எனவும் தெரிவித்தார். வங்குரோத்து நிலையிலுள்ள நாட்டை மேம்படுத்துவதை விட்டுவிட்டு, இது போன்ற அரசியல் பழிவாங்கல்கள் என்ற போர்வையில் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு சலுகைகள் வழங்கப்படுவதை நான் எதிர்க்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.

Tags :