Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீரற்ற கால நிலையால் யாழ்ப்பாணத்தில் 221 குடும்பத்தினர் பாதிப்பு

சீரற்ற கால நிலையால் யாழ்ப்பாணத்தில் 221 குடும்பத்தினர் பாதிப்பு

By: Nagaraj Sat, 12 Nov 2022 10:46:37 AM

சீரற்ற கால நிலையால் யாழ்ப்பாணத்தில் 221 குடும்பத்தினர் பாதிப்பு

யாழ்ப்பாணம்: சீரற்ற கால நிலையால் பாதிப்பு... யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 221 குடும்பங்களைச் சேர்ந்த 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், 14 குடும்பங்களை சேர்ந்த 46 பேர் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

family,welfare,station,vulnerability,hospital ,குடும்பம், நலன்புரி, நிலையம், பாதிப்பு, மருதங்கேணி

பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் 174 குடும்பங்களைச் சேர்ந்த 584 பேரும், யாழ்ப்பாணப் பிரதேச செயலகப் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும், மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேரும், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிகண்டி பொதுநோக்கு மண்டபத்தில் நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டு 14 குடும்பங்களை சேர்ந்த 46பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags :
|