Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காய்ச்சல் முகாம்கள் மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 22, 873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

காய்ச்சல் முகாம்கள் மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 22, 873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Mon, 14 Sept 2020 10:44:50 AM

காய்ச்சல் முகாம்கள் மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 22, 873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் இதுவரை 42 ஆயிரத்து 532 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. மாநிலத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கையில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

எனவே, சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

influenza camp,testing,corona virus,chennai,vulnerability ,காய்ச்சல் முகாம்,பரிசோதனை,கொரோனா வைரஸ்,சென்னை,பாதிப்பு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை 42 ஆயிரத்து 532 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 24 லட்சத்து 40 ஆயிரத்து 209 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 477 பேருக்கு காய்ச்சல், சளி அறிகுறி இருந்தது.

இதையடுத்து அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 655 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றில் 22 ஆயிரத்து 873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags :